சுமார் பத்தாண்டுக்கு முன்பு,அமெரிக்கா அனுப்பிய சில உளவு செயற்கைக் கோள்கள் பூமியைச் சுற்றி வரும்போது,அவை பூமியின் ஒரு குறிப்பிட்ட இடத்தைக் கடக்கும்போது மட்டும் 3 விநாடிகள் வரை ஸ்தம்பித்து நின்றுவிடுகின்றன.(இயற்பியல் விதிப்படி, வட்டமாகவோ,நீள் வட்டமாகவோ சுற்றும் ஒரு பொருள் திடீரென ஒருபோதும் நிற்காது.அப்படி நின்றால்,அது வெடித்துவிடும்). 3 விநாடிகளுக்குப் பிறகு ,அவை வழக்கம் போல பூமியை சுற்றி வருகின்றன.
இந்த சம்பவத்தினை அறிந்த (உலகின் பல நாடுகளைப் பகைத்துக் கொண்ட) அமெரிக்காவுக்கு பயம் வந்துவிட்டது;யாராவது நம்மை விட லேட்டஸ்ட் டெக்னாலஜி கண்டுபிடித்துவிட்டார்களோ? என்ற எண்ணத்தில்,இது தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டது.தனி செயற்கைக் கோளையே ஏவி,ஆராய்ச்சி செய்தது.
அமெரிக்காவின் உளவு செயற்கைக்கோள்கள்,பூமியின் எந்த இடத்தைக் கடக்கும்போது இவ்வாறு 3 விநாடிகள் ஸ்தம்பிக்கிறது என்பதை முதலில் கண்டுபிடித்தது;அந்த இடம் பூமியில் அறிவாற்றல் மிகுந்த சமுதாயம் வாழும் இந்தியாவில்,உலகின் மூத்த இனமான தமிழினம் வாழும் தமிழ்நாட்டின் ஒரு பகுதியான (அட பாண்டிச்சேரியின் தாய் மொழி தமிழ்தானே!)திருநள்ளாறு என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டதோடு,மேலும் சந்தேகப்பட்டது.ஒருவேளை இந்தியா ஏதேனும் ரகசிய ஆராய்ச்சியின் மூலமாக விண்வெளியில் தன்னை மிஞ்சிவிடுமோ? என்றெல்லாம் பயந்து,மேலும் ஆய்வுகளை மேற்கொண்டது.
அந்த ஆய்வுகளின் விளைவாக,சனிக்கிரகத்திலிருந்து விநாடி தோறும் திருநள்ளாறு அருள்மிகு ஸ்ரீதர்ப்பணேஸ்வரர் கோவிலில் இருக்கும் சனிபகவான் சன்னிதியில் இருக்கும் சனிபகவான் சிலையின் மீது கண்ணுக்குத் தெரியாத கருநீலக்கதிர்கள் பாய்ந்து கொண்டே இருக்கின்றன.ஒவ்வொரு சனிப்பெயர்ச்சியின் போது,இந்த கருநீலக்கதிர்களின் அடர்த்தி பல மடங்கு அதிகரிக்கிறது.சனிப்பெயர்ச்சியை
நமது ஆன்மீகக்கடல் வலைப்பூவை வாசித்து,யாரோ தமிழ் வார இதழ்களுக்குச் சொல்ல,அவற்றில் இந்த பதிவு வெளிவந்திருக்கிறது.
இப்போது சொல்லுங்கள்: யார் அதிமேதாவிகள் இந்துக்களாகிய நமது முன்னோர்களா? இல்லை வெறும் மிரட்டலை ஆயுதமாகக் கொண்டு உலகை ஆட்டிப்படைக்கும் அமெரிக்கா முதலான வல்லரசுகளா?
இதை விஞ்சும் வகையில் ஒரு விசயம் கேள்வி பட்டேன்.நீங்கள் எதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே நவகிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின் மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்!! உங்கள் அறிவியல் அறிவையும் கொஞ்சம் தட்டிவிடுங்கள்!!
எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கட்டிவைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள் பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்து, இந்தஅறிவியலின் அதிசயத்தை அனைத்து தலைமுறையும் அறியவேண்டும், அதற்காக அவர்கள் நம்மை பின்பற்ற வைத்ததுதான் கடவுள் மார்க்கம் என்றே நான் எண்ணுகிறேன்...
எது எப்படியோ??? நமது முன்னோர்கள் நம்மை விட
கில்லாடிகள் !!!!
எப்படியா ??
அவர்கள் போட்ட புதிருக்கு இன்னும் விடை தெரியாமல்
அலைந்து கொண்டிருகிருகிறோம்.. அறிவியல் வளர்ச்சியோடு.
நமக்கு மேலே ஒருவன்....
ஓம்சிவசிவஓம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக