வெள்ளி, 27 ஜூன், 2014

ருத்ராட்சம் அணிவது பற்றி சிவபுராணம்

பஞ்சாட்சர மந்திரங்களை உச்சரித்தல்,திருநீறு தரித்தல்,ருத்ராடம் அணிதல் இம்மூன்றையும் ஒருவன் ஒருசேர செய்வது: திரிவேணி சங்கமத்தில் நீராடுவதன் புண்ணியத்தைப் பெற்றுத்தரும்.
ருத்ராட்சங்களை எண்ணற்ற அளவில் உடலில் தரித்துக் கொள்பவன்,மகேசனைப் போல அனைத்துத் தேவர்களாலும் தலை தாழ்ந்து வணங்கப்படுகிறான்.
...

ஒருவன் எவ்வகைப் பிறவி எடுத்திருந்தாலும் சரி, அவன் ருத்ராட்சத்தை அணிவானாகில்,நரகங்களிலிருந்து விடுபடுகிறான்.
எவ்வகை வர்ணத்தை(ஜாதியை)ச் சேர்ந்தவனாக இருந்தாலும் சரி;எவ்வகை ஆசாரத்தைக் கடைபிடிப்பவராயினும் சரி; பெண்களாயினும் சரி; அவர்கள் ‘ஓம் நமசிவாய’ என்னும் மந்திரத்தை உச்சரித்து,ருத்ராட்சங்களை அணிந்து கொள்ளலாம்.

ருத்ராட்சத்தை ஒருவன்/ள் ஒரு பகலில் அணிந்திருப்பானாயின், அவன் இரவில் செய்த பாவங்களை அது எரித்துவிடும்.இரவில் அணிந்திருப்பானாகில் அது அவன் பகலில் செய்த பாவங்களை எரித்துவிடுகிறது.ஆதலால் ஒருவன் எந்நேரமும் ருத்ராட்சங்களை அணிந்து கொண்டிருக்க வேண்டும்.
ருத்ராட்சமும் திருநீறும் அணிந்தவன் ஒருபோதும் யமலோகம் செல்வதில்லை;
ருத்ராட்சம் அணிந்து ஒருமுறை எவ்வித மந்திரம் கூறினாலும்,அதை 1,00,00,000 முறை உச்சரித்த பலனைத் தரும்.
ருத்ராட்சம் அணிந்து ம்ருத்யுஞ்ச மந்திரம் உச்சரிப்பவன் எல்லாவித நோய்களிலிருந்தும் விடுபடுகிறான்.அவனை அகால மரணமோ,துர்மரணமோ நெருங்குவதில்லை

செவ்வாய், 17 ஜூன், 2014

கோவில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்

1. பிரகாரம் வலம் வரும் பொழுது வேகமாக நடக்க கூடாது.

2. வீண் வார்த்தைகளும், தகாத சொற்களும் பேசுதல் கூடாது.

3. சோம்பல் முறித்தல், தலை சிக்கெடுத்தல், தலை விரித்துப் போட்டு கொண்டு செல்லுதல், வெற்றிலை பாக்கு போடுதல் கூடாது.

4. பிறப்பு, இறப்பு, தீட்டுக்களுடன் செல்ல கூடாது.

5. கைலி, தலையில் தொப்பி, முண்டாசு அணிய கூடாது.

6. கொடிமரம், பலிபீடம்,நந்தி, கோபுரம் நிழலை மிதிக்க கூடாது.

7. கவர்ச்சியான ஆடைகள் அணியக்கூடாது.

8. நந்தி தேவருக்கும் சிவலிங்கத்திற்கும் இடையில் போகக் கூடாது.

9. தரிசனம் செய்தபின் பின்னால் சிறிது தூரம் நடந்து, பின்னர் திரும்ப வேண்டும்.

10. ஒரு கையால் தரிசனம் செய்ய கூடாது.

11. மேலே துண்டுடன் தரிசனம் செய்ய கூடாது.

12. கோவிலுக்குள் உண்ண, உறங்க கூடாது.

13. கோவிலுக்குள் உயர்ந்த ஆசனத்தில் அமர கூடாது.

14. பலிபீடத்திற்கு உள்ளே சந்நிதியில் யாரையும் வணங்க கூடாது.

15. கோவில் சொத்துக்களை எவ்விதத்திலும் அபகரிக்கவோ அனுபவிக்கவோ கூடாது.

16. அஷ்டமி,நவமி, அமாவசை,பௌர்ணமி,மாத பிறப்பு, சோமவரம், பிரதோஷம், சதுர்த்தி, இந்த தினங்களில் வில்வம் பறிக்கக் கூடாது.

17. ஆலயத்தில் புகைப்படம் எடுக்க கூடாது.

18. தெய்வ வழிபாடு ஈர துணி கூடாது.

19. கோவிலுக்குள் குளிக்காமல் செல்ல கூடாது.

20. சந்நிதியில் தீபம் இல்லாமல் தரிசனம் செய்யக் கூடாது.

21. கோவிலுக்கு சென்று வந்தபின் உடனடியாக கால்களை கழுவக் கூடாது. சிறிது நேரம் அமர்ந்த பிறகு தான் கழுவிக்கொள்ள வேண்டும்

22. கோவிலுக்குள் நுழைந்தது முதல் வெளியே வரும் வரை நிதானமாக அவசரம் இன்றி கடவுளை நமக்குள் உணர்ந்து ஓம் நமசிவாய மந்திரம் கூறி வழிபடுவது மிக சிறந்ததாகும்.

23. கோவிலில் நுழையும் போதும் திரும்பி வரும் போதும் கோபுர தரிசனம் அவசியம்.

24. ஸ்தல விருட்சங்களை இரவில் வழிபட கூடாது.

25. கோவில் உள்ளே உரக்க பேசுதல் கூடாது.

26. நம்முடைய பேச்சுக்களோ செயல்களோ அடுத்தவர்களுடைய வழிபாடையோ, தியானத்தையோ இடையுறு செய்ய கூடாது.

வெள்ளி, 9 மே, 2014

தமிழினின் கிணறு வெட்டும் அறிவியல்

அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனாங்க??? . . .
கிணறு அமைப்பது என்ப து அத்தனை எளிதான காரியமில்லை . பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று.
ஒரு வேளை தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால் அத்தனை உழைப்பும் வீணாகிவிடும் . அதே போல் கோடையில் கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும் உள்ளது . ஆனால் இவற்றிற்கெல்லாம் எளிய இலகுவான தீர்வுகள் இதோ.
மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இட த்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில் நீரூற்று தோன்றும் என்கின்றனர் .
சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல நீரூற்று என அறிவது எப்படி ?
நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல்நாள் இரவு தூவி விடவேண்டும். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டு சென்று சேர்த்த அடையாளங்கள்அதாவது தடயங்கள் இருக்குமாம் அந்த இடத்தில் கிணறு வெட்டினால் தூய சிறப்பான நன்னீர் கிடைக்கும் என்கிறார்கள்.
சரி தூய நீரும் கண்டு கொண்டாயிற்று. . . . கோடைகாலத்திலும் வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிவது எப்படி ?
கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திட்க்குள் மேய விடவேண்டும். பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம் .
அப்படி அவை படுக்கும் இடங்களை 4, 5 நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத் தில் தொடர்ந்து படுக்குமாம். அந்த இடத் தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்
நன்றி- Jayant Prabhakar 

ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

பங்குனி உத்திரம் - 13.4.2014

சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு, சீர்காழியில் அவதரித்தவர் திருஞானசம்பந்தர். மயிலை கபாலீஸ்வரரை முதன்மைப்படுத்தி, 10 பாடல்கள் புனைந்து, சிவநேசன் செட்டியார் மகள் பூம்பாவையை அவர் உயிர்ப்பிக்கச் செய்த நிகழ்வை அறிவோம். அவ்வாறு தாம் இயற்றிய பாடல்களில் தமிழர்கள் கொண்டாட வேண்டிய விழாக்களையும் பட்டியலிட்டிருக்கிறார் திருஞானசம்பந்தர். ஆனால் மயிலை கற்பகவல்லி மீது அவர் பாடல் இயற்றவில்லை என்பது அந்தப் பாடல்களிலிருந்து தெரியவருகிறது. 

19ம் நூற்றாண்டில்தான், மக்களிடையே சக்தி வழிபாடு மிகுந்ததாலும், அதற்குப் பிறகே அம்பாள் மீதான பாடல் இயற்றப்படுவது வழக்கமாகியது என்ற உண்மையும் இதற்குக் காரணமாக இருக்கலாம். பவுர்ணமி திதி அன்று எந்த நட்சத்திரம் சேர்கிறதோ, அன்றைக்கு விழா கொண்டாடுங்கள் என திருஞானசம்பந்தர் அறிவுறுத்தியுள்ளார். இப்படி ஒரு ஒழுகுமுறையை இவருக்கு முன்னர் யாரும் அறிவித்ததாக ஆதாரம் இல்லை எனலாம். இந்த ஒழுகுமுறைப் படி, கார்த்திகையில் ஒளி விழா, மார்கழியில் திருவாதிரை விழா, தை மாதத்தில் தைப்பூசத் திருவிழா, மாசியில் கடல் ஆட்டு விழா, பங்குனியில் உத்திரத் திருவிழா என இப்போது நாம் கொண்டாடி வருகிறோம். இந்த வகையில் ஒன்றுதான், வருடக் கடைசி மாதமான பங்குனியில் வரும் உத்திர நட்சத்திர தினம்.
‘‘மலிவிழா வீதிமடநல்லார் மாமயிலைகலி விழாக்கண்டான் கபாலீச்சுரம் அமர்ந்தான்பலிவிழா பாடல்செய் பங்குனியுத்திரத்தின் நாள் ஒலிவிழாகாணாதே போதியோ பூம்பாவாய்’’ -என்கிறார் திருஞானசம்பந்தர். 
1200 ஆண்டுகளுக்கு முன்னரே, பங்குனி உத்திரத்தைப் பற்றி அவர் பாடியதும், 2500 ஆண்டுகளுக்கு முன்னரே இலக்கியத்தில் உத்திர விழாவைப் பற்றி கூறப்பட்டதற்கு ஆதாரமாக அமைந்திருக்கலாம். அகநானூறு எனும் நூலில் 137ம் பாடலில், இந்த விழா பற்றிய குறிப்பு வருகிறது. பண்டைய நாளில், ஒருவன் மூன்றே மூன்று காரணங்களுக்காக மட்டுமே வீட்டை விட்டுச் செல்வது வழக்கம்:
1. பணம் சம்பாதிக்க, வியாபாரம் செய்ய.2. அடுத்த நாட்டின் மீது போர் தொடுக்க தம் மன்னருக்கு உறுதுணையாகச் செல்ல.3. ஆன்மிகத் தலங்களை தரிசிக்க
இப்படிச் செல்லும் கணவன், தன் மனைவியிடம் தான் திரும்பிவர 2 மாதத்திற்கு மேலாகும் எனக் கூறுவதாகவும், அதைக் கேட்டதிலிருந்து மனைவி, அன்று முதல் குளிக்காமலும் அலங்கரித்துக் கொள்ளாமலும், சரிவர உணவு உட்கொள்ளாமலும் நெற்றியில் திலகம் இடாமலும் விளங்கியதாகவும் அதைக் கண்ட தோழி, ‘ஏன் இந்த அலங்கோலம்? உன் கணவன் உன்னைவிட்டு நிரந்தரமாகவா பிரிந்து சென்றுவிட்டார்? அவர் உன்னைப் பிரியவும் மாட்டார். அதனால் கவலையை விடு’ என்று கூறி, அவளுக்கு பங்குனியின் சிறப்பை விவரிப்பதாகவும் அகநானூறு பாடல் சொல்கிறது. 
‘‘பங்குனி முயக்க கழிந்த வழிநாள், தீயின் அடுப்பில் அரங்கம் போல் பெரும் பாழு கொண்டது உந்தன் நுதலே’’ -என்பது அப்பாடல். அதாவது, ‘நம் நாட்டில் சிவாலயங்களில் பங்குனி மாதத்தில் உத்திர தினத்தன்று வெகு சிறப்பாக விழா கொண்டாடுவர். அன்று அண்டைய ஊர்களிலிருந்து மக்கள் திரளாக வந்து கூடுவர். நாதஸ்வர இசையும், வாண வேடிக்கைகளும் காண மக்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள். அவ்விழா முடிந்த மறுநாள் விழா நிகழ்ந்த இடத்தைப் பார்த்தால் வெறிச்சென்றிருக்கும். 
கோலாகலமாகக் கொண்டாடிய விழா மறுநாள் எவ்விதம் வெறிச்சோடி இருக்கிறதோ, அது போன்று நீ அலங்காரம் செய்து கொள்ளாது, உணவு அருந்தாது, திலகமிடாது விளங்கும் காட்சியும் உள்ளது. குளித்து அலங்கரித்து குங்குமப் பொட்டோடு விளங்கினால் பங்குனி உத்திரத் திருவிழா போன்று மங்களகரமாக விளங்குவாய்’ என்று பொருள். தட்சனால் ஏற்பட்ட அவமானம் தாங்காது, இமயவரம்பனுக்கு மகளாகப் பிறந்து, காஞ்சியில் 32 அறங்களை வளர்த்ததும், காஞ்சியில் ஏகாம்பரநாதனை அம்பிகை திருமணம் செய்து கொண்ட நாளும் பங்குனி உத்திரமேயாகும். 
நமிநந்தி அடிகள் ஒரு சமயம் விளக்கெரிக்க எண்ணெய் கிடைக்காது, தண்ணீரைக் கொண்டே விளக்கேற்றி வைத்த சிறந்த சிவபக்தர். உத்திரத்தன்று ஆலயத்தில் நிறைய விளக்குகள் ஒளிர அரும்பாடுபட்டவர். இத்தகைய பங்குனியின் சிறப்பைப் பற்றி சம்பந்த பெருமான் கூறியுள்ளதை உலகோர்க்கு விளங்க வைத்த பெருமை, நமிநந்தி அடிகளையே சாரும். 
- மு.அருணகிரி