சனி, 15 டிசம்பர், 2012

பலாவின் சுளையறிய வேண்டுதிலேல்

முக்கனிகளுள் ஒன்றுதான் பலாப்பழம். இதன் வாசனையோ பழத்தின் ருசியைக் காட்டிவிடும். வெளித்தோற்றத்திற்கு கரடுமுரடாக காட்சி அளித்தாலும் உள்ளிருக்கும் சுளைகள் அழகாகவும் இனிமையாகவும் இருக்கும்.
பலாப்பழத்தினை சிலர் விரும்பி உண்பார்கள். சிலர் குளிர்காலத்தில் சாப்பிடக்கூடாது என்று பல கருத்துக்கள் முன்வைப்பார்கள். ஆனால் பழத்திலுள்ள மருத்துவக் குணங்களை அறியாமலும் இருக்கின்றார்கள்.


சங்க காலத்திலேயே எழுதப்பட்ட கணக்கதிகாரம் என்ற நூலில் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையை அறிந்துகொள்ளும் வழிமுறை மிக எளிமையாகக் கூற
ப்பட்டுள்ளது.

"பலாவின் சுளையறிய வேண்டுதிலேல் ஆல்கு
சிறுமுள்ளுக் காம்பரு எண்ணி - வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தனுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை."
- கணக்கதிகாரம்-




விளக்கம் :


பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணி ஆறாலே பெருக்கி ஐந்தால் வகுக்க பலாப்பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையை அறியலாம் !



பலாப்பழத்தில் விட்டமின்களும், பிற சத்துப் பொருட்களும் கணிசமாக இருப்பதால், உடல் வளர்ச்சிக்கும், வலிமை பெறவும் ஒப்பற்ற பழமே.
 
சருமத்தை பளபளப்பாக வைக்கும் சிறப்புக் குணம் பலாப்பழத்திற்கு உண்டு. பல் உறுதி பெற, ஈறு கெட்டியாக இருக்க, பலாப்பழம் சாப்பிட வேண்டும்.
 
உடம்பில் தொற்று நோய்க் கிருமிகளை அழிக்கும் சக்தி பலாப்பழத்தில் இருக்கிறது. அதுமட்டுமா? எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்தும் தன்மை பலாப்பழத்திற்கு உள்ளது என ஜேர்மனி, அமெரிக்காவில் மேற்கொண்ட ஆரம்ப நிலை ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றது. தொடர்ந்து இதுபற்றிய ஆராய்ச்சி நடந்து வருதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
 
பலாப்பழ பானகம் உடம்புக்கு குளிர்ச்சியைத் தரும் தன்மையது. உடலில் உள்ள தசைகளை சீராக இயங்க வைக்கும் ஆற்றல் பலாப்பழத்திற்கு உண்டு.
 
தோல் வறட்சி அடையாது பாதுகாக்கும் சத்துப் பொருள் பலாப்பழத்தில் உரிய அளவு இருக்கிறது. பலாப்பழ நீர் இரவில் அருந்தினால் நன்கு தூக்கம் வரும். தூக்கமில்லாமல் அவதிப்படுவோர்க்கு நல்ல எளிய மருந்து.
 
பலாப்பழத்துடன் சிறிது கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால், உடல் அசதி, களைப்பு நீங்கி, உற்சாகம் ஏற்படும். பலாப்பழத்துடன் சிறிது கசகசாவை மென்று சாப்பிட்டால், குடல் அழற்சி நீங்கும்.
 
பலாப்பழத்துடன், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால், உடலில் உள்ள கழிவுப் பொருட்கள் அத்தனையும் வெளியேறி, நலன் பயக்கும்.
 
நீரிழிவு நோய் உள்ளவர்கள் பலாப்பழத்தை சாப்பிடக் கூடாது. வெறும் பலாப்பழத்தை அதிகம் உண்ணுவதால் ஆஸ்துமா நோயை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக